அன்று என் முதலிரவு!
எப்போதும் முதல் இரவுகள் சுவாரசியமானவை. அன்று என் முதலிரவு பெரும் ஆவலுடன் ஆடி அசைந்துவரும் என்னவளுக்காய் காத்திருந்தேன். அவளுக்கு என் தவிப்பு தெரியப்போவதில்லை, அவளுக்கென்று அவளே வகுத்துக்கொண்ட சில வரைமுறைகளை அவளே பின்பன்றுவதில்லை. வேண்டுமென்றே அவள் தாமதமாக வருவதில்லை, சில சடங்குகளின் நிமிர்த்தம் அவள் வருகை தாமதமாகிறது போலும். வரும் அவள் ஏற்கனவே பலரால் நிறைந்தவளா? இல்லை எனக்கே எனக்காய் காலியாக வருவாளா என்று என்னுள் சில கேள்விகள். அவனவனுக்கு ஆயிரம் இடங்களில் முதலிரவு எனக்கோ உலகிலே வாழ்வதற்கு அதி சிறந்த இடமான மெல்பேர்னில் இன்ப இரவு. என் முதலிரவு அறை பெரிதாக தமிழ் சினிமா முதலிரவு அறைகள் போல் அலங்கரிக்கப்படவில்லை. என் முதலிரவு அறையில் இன்னும் இரண்டு அன்பர்கள் வந்து அமர்ந்துகொண்டார்கள்.
அட இன்னும் இருவரா என்று ஜொள்ளு விடும் அன்பர்களுக்கு ஒரு சின்னத் தகவல், நான் முதலிரவு என்று சொன்னது நான் முதல் முதலாக night shift செய்துவிட்டு வீடு வந்த இரவை. என்னவள் என்பவள் யார்? – Melbourne Nighttime train. இப்போது இதை வாசிக்கத் தொடங்கிய பல அன்பர்கள் மூடிவிட்டு வீடு கிளம்புவதை அவதானிக்க முடிகிறது, மேற்கொண்டு நிக்கும் அன்பர்களுக்கு என் கதையை சொல்கிறேன்.
நான் வேலை செய்யும் இடத்திலிருந்து வீடு வர இரண்டு train எடுக்க வேண்டும். அதெல்லாம் இங்கு சாதாரணம். சூழல் பற்றி முக்காடு போட்டு அழும் முதல்வர்கள் எல்லாம் கோட் போட்டுகொண்டு உச்சி வெயிலில் கோச்சியில் போவார்கள். கவனிக்க இவர்கள் அம்மா அப்பா செத்தா எல்லாம் அழமாட்டாங்க. முதலாவது டூரோங்கா நிலையத்தில் இருந்து பெர்ன்லி வந்த பிறகுதான் இந்தக் காத்திருப்பு. பொதுவாக இரவில் நம்ம ரயில்கள் எல்லாம் இலங்கை 155 பஸ் போலதான் ஓடும். அன்றைய இரவை இலியானா இரவு என்று சொன்னால் மிகையாகாது, அவ்வளவு ஜில்லென்று இருந்தது.
வந்திருந்த அன்பரில் ஒருவர் வெள்ளையர், மற்றவர் கொஞ்சம் பழகிய முகம். பொதுவாக ஆஸ்திரேலியர்கள் அமைதியை விரும்பமாட்டார்கள். ஆக வழக்கம்போல வெள்ளை அன்பரே பேச்சை தொடக்கினார். முதலில் நாங்கள் எந்த நாடு என்றுதான் கேட்டார். அட என்ன ஆச்சரியம் மற்றவர் நம்மாள், இலங்கையராம். முதலில் வெள்ளையர் சுவாரசியமாக பேசினார், போகப் போக எலெக்ட்ரிக் வாளில் மாட்டுப்பட்ட மாடு போல நான் ஈனசுவரத்தில் மனதில் முனகினேன். அவ்வளவு ரம்பம்.
வெள்ளை ஆசாமி திடீரென்று தனது பேச்சை நியூட்டன், இரசாயனவியல், பௌதீகம் என்று பேச்சை மாற்றினார். எனக்கு ஒபாமாவை பார்த்த ஒசாமா மாதிரி நடுக்கம் எடுக்கத் தொடங்கியது. ஏற்கனவே சம்பந்தன், தில்லைநாதன் என்று பலருக்கு கெட்டவார்த்தையால் மனதுக்குள் அபிஷேகம் செய்த நினைவும் வந்தது. ஆசாமி எப்படியும் பேச்சை நிறுத்தமாட்டார் என்று தெரிய கொஞ்சம் நமக்கும் தெரிஞ்ச fieldக்கு கதையை மாத்துவம் என்டு கிரிக்கெட்டை பற்றி பேச்செடுத்தேன். உடனே அவர் அழகான ஆங்கிலத்தில் “sorry, basically I am from Germany, I dont know much about cricket” என்று ஒரு குண்டை தூக்கிப்போட்டார். பிறகென்ன ம*** “I am Australian” என்டு முதல்ல சொன்னானோ தெரியா.
திடீரென்று அந்த இலங்கை நண்பரும் கழண்டுகொண்டார், நான் விதியை நொந்தவாறு கதைகளை கேட்டுகொண்டிருந்தேன். ஏற்கெனவே SLIIT lectures நேரம் கண்ணை திறந்து கொண்டு தூங்குவதுக்கு பெரும் பயிற்சிகள் எடுத்திருப்பதால் இந்த ஆசாமியை அந்த டெக்னிக்கில் சமாளிக்க முடிந்தது. ஒரு வழியாக என் train வந்தது, ஏழரைச் சனி முடிந்தாலும் இந்த சனி என்னை விடுவதாக இல்லை. trainஇலும் தொத்திக்கொண்டது. இன்னும் ரெண்டு station தானே என்று அசட்டையாக இருக்க மேலும் ஒரு atom bombஇணை இந்தப் புள்ள பூச்சி மேல போட்டது அந்தப் பெருச்சாளி. நான் சொல்வது உங்களுக்கு விளங்கவில்லை இதை நான் உங்கள் வீடுவரை வந்து விளங்கப்படுத்த விரும்புகிறேன் என்றார். இவன் நல்லவனா, கெட்டவனா? சைக்கோவா இல்லை வைகோவா? கொள்ளைமாட்டும் அடிப்பானா இல்லை கொலையும் செய்வானா? என்றும் ஆயிரம் கேள்வி. உயர்தர பரீட்சைக்கு பின் நான் ஆதிகம் பதில் தெரியாமல் முழித்தது இந்தக் கேள்விகளுக்குத்தான். ஏற்கனவே இவரின் குட்டி editionபோல திவாகர் வீட்டில் இருப்பதால், எதற்கு வம்பென்று வாழ்கையில் சொல்லாத பொய் எல்லாம் சொல்லி ஒருவழியாக Glenferrie stationஇல் வந்து குதித்தேன். நாத்திகம் பேசிவந்த பிருந்தாபன் இவரிடம் இருந்து தப்பிக்க ஆறேழு கோவில்களில் நேர்த்திக் கடன் வைத்தார் என்ற செய்தியுடன் இந்தக் கதை முடிகிறது. இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.



hahahhaha this is one of ur best blog … enjoyed reading.. awesome
thanks keep reading
hmm you gotta get used to for these intimidate conversations,,
thanks for sharing binthu
thanks buddy…. keep reading
geman la litrature padikkuravanum physiks chemistry kathaipaanugal
அத நீங்க சொன்னாதானே நமக்கு தெரியும்..
ஹாஹா……பாவி மக்கா,முதலிரவுனு ஏமாத்தி கூப்டுகிட்டு வந்தாலும்,மேப்பெல்லாம் போட்டு சின்னராசு,சிக்குனத சொன்ன விதம் படிக்க சிரிப்பா இருக்கு,
இப்படி எதாச்சும் போட்டா தானே நீங்க எல்லாம் வாரிங்க. by the way I saw you drawings really good keep it up. if possible put a small description of picture.