ஸமர்ப்பணம்
நிறைய நாள் எழுதவேண்டும் என்று நினைத்த கவிதைகள் சில அனைத்தும் பொருந்திவந்தால் இன்னும் ஒரு மாதம் வரை எழுதலாம் என்று நினைக்கிறேன். பார்ப்போம்….. இதோ முதலாவது…
ஆதி முதல் இன்றுவரை
உயிர் தொடர்ந்த இறைவனுக்கும்
இறை தந்த இரைதனை இனிதுன்ற
உயிர்களுக்கும் இனிதான கவிதனிலே
நான் தரும் ஸமர்ப்பணம்
மனிதனாய் உருதந்த அன்னைக்கும்
நல் மைந்தனாய் மெருகுதந்த தந்தைக்கும்
தினம் உடனிருந்த நட்புக்கும்
நல் நாளில் நான் தரும் ஸமர்ப்பணம்
கலைஞனாய் நல் இளைஞனாய்
கவிஞனாய் வாதியாய் உத்வேகம்
தந்த உறவுகளுக்கும்
நான் தருவேன் உயிரால் ஓர் ஸமர்ப்பணம்


Awesome awesome,happy to hear that my most awaited blogs of urs r coming up..
Thanks visit frequently