நான் யார்?
வணக்கம்! என் பெயர் பிருந்தாபன். லட்சோப லட்சம் கனவுகள் காணும் கோடானு கோடி தனியன்களில் ஒருவன். தனி மனிதன் என்று உலகில் ஒருவருமே இல்லாத போது இவன் எப்படி தனியன் ஆனான் என்று யோசிக்கிறீர்களா? போராட்டங்கள், துரோகங்கள், சூழ்ச்சிகள் அனைத்தும் அடங்கிய மகாபாரதமே என் வாழ்கை. ஏன் இன்று கனவுகளுடன் வாழும் அனைத்து இளைஞர்களின் கதையும் என் கதைதான். நல்ல நான்கு நண்பர்களையும் இனும் சில அப்பாவிகளையும் நம்பிக்கொண்டே நம் காலச்சக்கரம் ஓடிக்கொண்டிருக்கிறது. தோல்விகள் என்றுமே எமக்கு புதிதில்லை வெற்றிகளைக் கண்டு நாம் ஓய்ந்ததுமில்லை.
Nothing personal என்ற கருதுகோளின் அடிப்படையில் என் பிரத்தியோக தளங்களை பதிவிறக்கிவிட்டேன். எனக்கு கருத்துக்களை சுதந்திரமாக பதிய வேண்டும் என்ற ஆவல் இருந்தது அதற்காக இந்த ப்ளொக் கலாசாரத்தினுள் நுழைந்துவிட்டேன். தொடர்ந்தும் உங்கள் ஆதரவுக்காய் கையேந்தி நிற்கின்றேன்.
துடித்திடும் தோழா துணிந்து வா! நின்னோடு நாம் அறுவராவோம்!
